இஸ்ரேலுக்கு எச்சரிக்கை: புதிய தொலைதூர ஏவுகணை அறிமுகப்படுத்திய ஈரான்..!

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை: புதிய தொலைதூர ஏவுகணை அறிமுகப்படுத்திய ஈரான்..!

தனது புதிய தொலைதூர ஏவுகணையை ஈரான் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

தலைநகா் டெஹ்ரானில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அந்த ஏவுகணையை அதிகாரிகள் செய்தியாளா்களுக்குக் காட்டியுள்ளனர்.

‘கொராம்ஷாா்-4’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, 1,500 கிலோ எடை கொண்ட வெடிபொருளுடன் 2,000 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டதன் காணொளியையும் அதிகாரிகள் வெளியிட்டனா். 

இஸ்ரேலை தனது பரம எதிரியாகக் கருதும் ஈரான், பாலஸ்தீன அமைப்புகளுக்கு ஆயுத உதவி அளித்து வருகிறது.