தமிழர் பகுதியில் காணாமல்போன 15 வயது மாணவி - புத்தளத்தில் கண்டுபிடிப்பு..!

தமிழர் பகுதியில் காணாமல்போன 15 வயது மாணவி - புத்தளத்தில் கண்டுபிடிப்பு..!

மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று(19) மாலை புத்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

மாணவி காணாமல் போனது தொடர்பாக பெற்றோர் சிலாவத்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த மாணவி நேற்று வெள்ளிக்கிழமை(19) மாலை புத்தளத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில்,புத்தளம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை மேலும் கூறியுள்ளார்.

மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை நேற்று (18) காலையில் இருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.

குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

மாணவி காணாமல் போனது தொடர்பாக நேற்றும், இன்றும் தேடிய பெற்றோர் மாணவி பற்றிய தகவல்கள் கிடைக்காததை தொடர்ந்து சிலாவத்துறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் (19) சிலாவத்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதாக குறித்த மாணவியின் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

மேலும் குறித்த மாணவி பற்றிய தகவல்கள் ஏதும் தெரிந்தவர்கள் 074-2614797 எனும் மாணவியின் தந்தையின் தொலைபேசிக்கு தகவல்களை தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.