அம்பாறையில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

அம்பாறையில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

அம்பாறை – ஒலுவில் பகுதியில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஒலுவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

குறித்த இளைஞர் நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக நேற்று மாலை சென்ற போது இந்த அனர்;த்தம் நேர்ந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.