![](https://yarlosai.com/storage/app/news/b228ea3d5ed1241b78aa532bbf317e34.png)
நாளை ஆரம்பமாகவுள்ள A/L பரீட்சை குறித்த அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று (22) இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2022 - 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை (23) முதல் 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற உள்ளது.
இவ்வருடம் 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, பெப்ரவரி 17ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது.
அத்துடன், பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.