15 வயது மாணவனுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய 29 வயது ஆசிரியை!

15 வயது மாணவனுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய 29 வயது ஆசிரியை!

29 வயது ஆசிரியை ஒருவர் தன்னிடம் படித்து வந்த 15 வயது மாணவனுக்கு ஆபாசப்படம் அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள மேற்கு வர்ஜீனியா என்ற பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருபவர் 29 வயதான ராம்சே கார்பென்டர் பியர்ஸ். இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது என்பதும் இவர் ஒரு அழகி பட்டத்தை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஸ்நாப் சாட் மூலம் தன்னிடம் படிக்கும் 15 வயது மாணவன் ஒருவனுக்கு ஆபாச புகைப்படங்களை ஆசிரியை பியர்ஸ் அனுப்பி உள்ளதாக தெரிகிறது. அந்த புகைப்படத்தை மாணவனின் பெற்றோர்கள் தற்செயலாக அவனது செல்போனில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் விசாரணையில் ஸ்நாப் சாட் மூலம் ஆபாச புகைப்படத்தை அனுப்பியது அந்த மாணவனின் ஆசிரியை பியர்ஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து நடந்த விசாரணையில் ஆசிரியர் பியர்ஸ் தனது தவறை ஒப்புக்கொண்டார். ஆபாச புகைப்படங்களை தனது கணவருக்கு அனுப்ப முயன்றபோது தவறுதலாக மாணவனுக்கு அனுப்பி விட்டதாகவும், இந்த புகைப்படத்தை பார்த்த மாணவன் மீண்டும் மீண்டும் அதிக புகைப்படங்களை அனுப்ப சொல்லி மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஆசிரியை பியர்ஸ்க்கு இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 15 வயது மாணவன் ஒருவனுக்கு அவரது பள்ளி ஆசிரியையே ஆபாசப்படம் அனுப்பிய விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.