அதிரும் உலகம்: கொரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் ஆறு இலட்சத்தைக் கடந்தன!

அதிரும் உலகம்: கொரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் ஆறு இலட்சத்தைக் கடந்தன!

உலக அளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை ஆறு இலட்சத்தைக் கடந்துள்ளது.

தற்போதைய நிலைவரப்படி ஆறு இலட்சத்து 583 பேர் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது.

உலக அளவில் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளில் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 42 இலட்சத்து 46 ஆயிரத்து 893 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸால் அந்நாட்டில் மட்டும் இதுவரை 37 இலட்சத்து 75 ஆயிரத்து 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 127 பேர் மரணித்துள்ளனர்.

இதையடுத்து, பிரேஸிலில் 20 இலட்சம் பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை அங்கு 77 ஆயிரத்து 964பேர் மரணித்துள்ளனர்.

அதேபோல், உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் இதுவரை 10 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு 26 ஆயிரம் பேர் மரணித்துள்ளனர்.

இதனைவிட, ரஷ்யாவில் ஏழரை இலட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுன் பிரித்தானியா, மெக்ஸிகோ, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், தென்னாபிரிக்கா, சிலி, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஜேர்மனி மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக அளவில் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒரு கோடியே 42 இலட்சம் பேரில் 85 இலட்சம் பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.