வவுனியா விபத்தில் பலியான இளைஞன் குறித்து வௌியான தகவல்!

வவுனியா விபத்தில் பலியான இளைஞன் குறித்து வௌியான தகவல்!

வவுனியா - நொச்சிமோட்டையில் நேற்று (05) அதிகாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவரும் மரணமடைந்துள்ளார்.

பருத்தித்துறை தம்பசிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (25) என்ற இளைஞரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

வெளிநாட்டு பயண ஏற்பாட்டுக்காக குறித்த அதி சொகுசு பேரூந்தில் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேளையிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் இவ் இளைஞன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.