
நீர்கொழும்பில் உணவகத்திற்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள ஒரு வயது பெண் குழந்தை...!
நீர்கொழும்பு பேரியமுல்ல பகுதியில் பெண் குழந்தை ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வயதும் நான்கு மாதமுமுடைய பெண் குழந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் குழந்தை கொடுமையான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு கடுமையாக தாக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசேட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.