பிரதான வீதியை வழிமறித்து தடம்புரண்ட ரயில்!

பிரதான வீதியை வழிமறித்து தடம்புரண்ட ரயில்!

கோதுமை மாவை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

திருகோணமலையில் இருந்து சீதுவை நோக்கி கோதுமை மாவை ஏற்றிச் சென்ற ரயில், திருகோணமலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, ​​கலாவெவ புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

ரயில் கடவை ஒன்றில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக கல்நேவ - விஜிதபுர வீதியின் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ரயில் தண்டவாளம் பலத்த சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தண்டவாளத்தை சீரமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.