
ஹங்வெல்லவில் இரு சிறுமிகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர்
ஹங்வெல்ல - துன்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மூவர் இன்று (30) பிற்பகல் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
14 வயதுடைய இரண்டு சிறுமிகளும் 29 வயதுடைய யுவதியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
ஹங்வெல்ல காவல்துறையினர் மற்றும் சுழியோடல் குழுவினர் காணாமல்போயுள்ளோரை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.