
இரண்டு பாரவூர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி!
திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதியில், 96ஆம் கட்டை பாலத்தில், இரண்டு பாரவூர்திகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.
இன்று(27) அதிகாலை, திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி சீமெந்தை ஏற்றியவாறு பயணித்த பாரவூர்தி ஒன்றும், கந்தளாயிலிருந்து திருகோணமலைக்கு கற்களை ஏற்றியவாறு பயணித்த பாரவூர்தி ஒன்றும் மோதி, இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில், சீமெந்தை ஏற்றிச்சென்ற பாரவூர்தியின் சாரதி பலியானார்.
அத்துடன், கற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியின் சாரதி காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தம்பலகாமம் காவல்துறையினர் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.