சிரித்தால் தீரும் நோய்கள்

சிரித்தால் தீரும் நோய்கள்

சிரிப்பதால் நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது. நாம் சிரிக்கும் போது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள். சிரிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே தனது உணர்ச்சியை  வெளிப்படுத்துகிற உணர்வு உள்ளது. சிரிப்பதால் நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது.

நாம் சிரிக்கும் போது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. இதனால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. நீண்ட நேர சிரிப்பு உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகள் நீக்க பயன்படுகிறது. மேலும் ஜீரணிக்கும் நீர் சுரப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும்.

 


உடல் ரீதியாக..

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

* மன அழுத்த ஹார்மோனின் செயல்பாடுகளை குறைக்கும்

* உடல் வலியை போக்கும்

* தசைகளை தளர்வடைய செய்யும்

* இதய நோய்களை தடுக்கும்

மன ரீதியாக...

* மகிழ்ச்சியை நிலைத்திருக்க செய்யும்

* கவலை, பயத்தை போக்கும்

* மன அழுத்தத்தில் இருந்து விடுபடவைக்கும்

* மன நிலையை மேம்படுத்தும்

* மன நெகிழ்ச்சியை அதிகப்படுத்தும்

சமூக ரீதியாக...

* உறவை வலுப்படுத்த உதவும்

* மற்றவர்களை எளிதில் அணுக முடியும்

* குழுவாக செயல்படுவதை ஊக்கப்படுத்தும்

* மற்றவர்களுடனான மோதல் போக்கை குறைக்க உதவும்