துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை ஓபன் டாக்
துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுவதாக நடிகை அக்ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.
உயர்திரு 420 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அக்ஷரா கவுடா.
துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கும் அக்ஷரா, கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் அக்ஷரா அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், “துப்பாக்கி படத்தில் நடித்தது எதிர்பாராதவிதமாக நடந்தது. அப்போது நான் மும்பையில் இருந்தேன். துப்பாக்கி படத்தில் எனக்கு நடந்த ஒரு நல்லவிஷயம் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது. மற்றபடி அந்தப் படத்தில் நான் என்ன கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். காஜல் அகர்வால் தோழியாக நடிக்க என்னை அழைத்தனர். ஆனால் படத்தில் அப்படி இல்லை. இருப்பினும் அதற்காக எனக்கு கோபமில்லை." என்று கூறியுள்ளார்.
விஜய், அஜித் இருவரிடையே இருக்கும் ஒற்றுமை என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அக்ஷரா, “இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகம் பேசமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
அஜித்துடன் ஆரம்பத்தில் நடித்த போது எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. படம் வெளியான போது தான் அஜித் மிகப்பெரிய நடிகர் என்பது தெரிய வந்தது. எனக்கு நிறைய டிப்ஸ்களை கொடுத்திருக்கிறார். சினிமா தாண்டி அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியும். அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டது ‘லவ் லைஃப்’.முதலில் நாம் அவரைப் பார்க்கும் போது நம் குடும்பத்தாரின் நலம் விசாரிப்பார்.
விஜய் சேதுபதியுடன் உணவருந்த விரும்புவதாக அக்ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.
ஷர்ட் இல்லாமல் நடிகர் விஜய் மிகவும் அழகாக இருப்பார் என்றும் அக்ஷரா கவுடா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அஜித் மற்றும் சூர்யா ஆகிய இரண்டு நடிகர்கள் மீது கிரஷ் இருப்பதாக அக்ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.