பாலிவுட் நடிகர் ரன்பீர்கபூருக்கும் கொரோனாவா? அதிர்ச்சி தகவல்

பாலிவுட் நடிகர் ரன்பீர்கபூருக்கும் கொரோனாவா? அதிர்ச்சி தகவல்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் நேற்று இரவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இருவருக்கும் லேசான பாதிப்பு தான் என்றும் அதனால் விரைவில் இருவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இந்த நிலையில் அமிதாப் மற்றும் அபிஷேக் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியின் பரபரப்பு நீங்கும் முன்னர், ரன்பீர் கபூர் மற்றும் அவரது தாயார் நீட்டுசிங் ஆகியோர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.

இந்த செய்திகளுக்கு நீட்டுசிங் மகளும் ரன்பீர் கபூர் சகோதரியுமான ரிதிமா கபூர் சஹானி தனது சமூக வலைத்தளத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது தாயார் நீட்டு சிங் மற்றும் தனது சகோதரர் ரன்பீர் கபூர் ஆகியோர் நலமாக இருப்பதாகவும் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தயவுசெய்து ஒரு செய்தியை உறுதி செய்தபின் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதனை அடுத்து ரன்பீர் கபூர் மற்றும் அவரது தாயார் நீட்டுசிங் ஆகியோர்களுக்கு கொரோனா என்ற தகவல் முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகி உள்ளது. மேலும் பிரபல தயாரிப்பாளர் கரண்ஜோஹர் அவர்களுக்கும் கொரோனா என்பதும் வதந்தி என்பது குறிப்பிடத்தக்கது