இளம் தாய் ஒருவர் படுகொலை!

இளம் தாய் ஒருவர் படுகொலை!

இளம் தாய் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சூரியவெவ, மஹபெலெஸ்ஸ பிரதேசத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணவனிடம் இருந்து பிரிந்து தனது மகனுடன் தனிமையில் வாழந்து வந்த குறித்த பெண் மற்றொரு ஆணுடன் கள்ளத்தொடர்பிணை பேணி வந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் சூரியவெவ பொலிஸினால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டி பதில் நீதவான் நிரோஷன் கமகே, சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.