வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான தாங்கிவூர்தி!

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான தாங்கிவூர்தி!

எரிபொருள் கொண்டு சென்ற தாங்கிவூர்தி ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பெலியத்த - இசுருபுர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மாத்தறை எரிபொருள் கிடங்கில் இருந்து மத்தள பகுதிக்கு எரிபொருள் கொண்டு சென்ற தாங்கிவூர்தி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரவூர்தியின் முன்பக்க சில்லு வெடிப்புக்குள்ளானதால், சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாகவும், இதனால் தாங்கிவூர்தி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.