
அடுத்தவாரம் முதல் நிவாரண விலையில் சீனி
அடுத்த வாரத்தில் இருந்து மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள் செயற்கையான வகையில் சீனிக்குத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரித்திருப்பதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 2003ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தற்காலத்திற்குப் பொருத்தமான வகையில் மறுசீரமைக்கப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கூறினார்.
நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த அடுத்த வாரத்தில் இருந்து மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கூறினார்.