தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 667 பேர் கைது: 63 வாகனங்கள் பறிமுதல்
தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியமை தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி மணித்தியாலத்தில் 667 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 63 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 60,288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் பிரவேசித்த 641 வாகனங்கள் மற்றும் 1,128 நபர்கள் சோதனையிடப்பட்டதுடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 500 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
அத்துடன், அங்கிருந்து வெளியேறிய 901 பேரும் காவல்துறையினரால் சோதனையிட்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.