ஹொலிரூட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!
லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹோலிருட் தோட்ட கீழ் பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்தார்.
குளவி கொட்டுக்கு இலக்கான அவர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், 4 பிள்ளைகளின் தந்தையான 73 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் லிந்துலை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.