வங்காள விரிகுடாவின் கடற்பரப்பில் நில அதிர்வு

வங்காள விரிகுடாவின் கடற்பரப்பில் நில அதிர்வு

யாழ்ப்பாணத்திற்கு 600 கிலோமீற்றர் தொலைவில், வங்காள விரிகுடா கடற்பரப்பில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் எமது செய்தி சேவைக்கு இதனை உறுதிப்படுத்தியது.

ரிக்டர் அளவுகோலில் 5.1 மெக்னிரியூட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.