மட்டக்களப்பில் கொரோனாவால் வைத்தியசாலை சிற்றூழியர் உட்பட 10 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கொரோனாவால் வைத்தியசாலை சிற்றூழியர் உட்பட 10 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயங்களில் வைத்தியசாலை சிற்றூழியர் உட்பட 10 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 182 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.