அப்பாவைத் தொடர்ந்து மகனுக்கும் கொரோனா தொற்று..!

அப்பாவைத் தொடர்ந்து மகனுக்கும் கொரோனா தொற்று..!

இந்திய அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாமானிய மக்களை தாண்டி காவல்துறையினர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

அந்த வகையில் பொலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. குறித்த விடயத்தை அபிஷேக் பச்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

கொரோனா குறித்து பதிவிட்டுள்ள அபிஷேக் பச்சன், எனக்கும், என் அப்பாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். அனைவரும் பதற்றம் அடையாமல் அமைதி காக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நன்றி எனத் தெரிவித்துள்ளார்.