நாடாளுமன்றத்தின் சமையலறை - சிற்றுண்டிச்சாலைகளுக்கு பூட்டு

நாடாளுமன்றத்தின் சமையலறை - சிற்றுண்டிச்சாலைகளுக்கு பூட்டு

கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்றத்தின் சமையலறை மற்றும் சிற்றுண்டிச்சாலை என்பன மூடப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனால் நாடாளுமன்றில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் தற்காலிகமாக உணவுகளை வெளியில் இருந்து கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், உணவு பொதிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் எடுத்து செல்லப்படுவதற்கு முன்னர் பாதுகாப்பு காரணிகளுக்காக அதனை சோதனைக்குட்படுத்த பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அதிகாரிகள், பணிக்குழாமினர் உள்ளிட்ட 275 பேருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை குறிப்பிடத்தக்கது.