உரிய தீர்வொன்று கிடைக்கும் வரையில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் - ஆசிரியர், அதிபர் சங்கங்கங்கள்

உரிய தீர்வொன்று கிடைக்கும் வரையில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் - ஆசிரியர், அதிபர் சங்கங்கங்கள்

தங்களுக்கான உரிய தீர்வு முன்வைக்கப்படும் வரை தமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஆசிரியர், அதிபர் சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆசிரியர், அதிபர் சங்கங்களுக்கும், அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில் மீண்டும் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

ஆசிரியர், அதிபர்களின் வேதன முரண்பாட்டை தீர்ப்பது குறித்து ஆராய்வதற்காக, குறித்த அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், ஆசிரியர், அதிபர் சங்கங்களுக்கும், அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில் நேற்று முன்தினம் குறித்த சந்திப்பு இடம்பெறவிருந்த நிலையில், பின்னர் நேற்று வரை பிற்போடப்பட்டிருந்தது.

இதற்கமைய, இந்த சந்திப்பானது நேற்று மாலை அமைச்சர் விமல் வீரவங்சவின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, ஆசிரியர், அதிபர் சங்கங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அது தொடர்பிலான அறிக்கையொன்றினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிதியமைச்சிடம் கையளிப்பதாக அமைச்சரவை உப குழு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், உரிய தீர்வொன்று வழங்கப்படும் வரையில் தமது தொழிற்சங்க போராட்டம் இடைநிறுத்தப்படாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.