
வடமேல் மாகாண வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு
வடமேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்காகன வாகன வருமான வரிப் பத்திரம் விநியோகமானது இன்று (18) முதல் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண பிரதம செயலாளர் ஜீ.பி.எம்.சிறிசேன தெரிவித்தார்.
இந்த காலகட்டத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரத்திற்கு, வாகன உரிமையாளர்களுக்கு அபராதம விதிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.