ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற தகராறின்போது கை துண்டாக்கப்பட்ட நபர் மரணம்

ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற தகராறின்போது கை துண்டாக்கப்பட்ட நபர் மரணம்

கடந்த 14 ஆம் திகதி ரத்கம - சிரிகதுர பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையே  இடம்பெற்ற தகராறின்போது கை துண்டாக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நபர் உயிரிழந்துள்ளார்.

தாக்கப்பட்ட குறித்த நபர் கராப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

45 வயதான குறித்த நபர் தொடந்தூவ பகுதியைச் சேர்ந்தவராவார்.

பழைய தகராறு காரணமாக இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.