
கொவிட் சரீரங்களை அடக்கம் செய்ய கட்டணம் அறவிட வேண்டாம் - ஜனக பண்டார தென்னகோன்
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு எந்தவொரு கட்டணமும் அறவிட வேண்டாம் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற நிறுவனத்தலைவர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட்டால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய தேவையான எரிவாயுவை அரசாங்கம் இலவசமாக வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.