தப்பியோடிய கொரோனா தொற்றாளர் - மனைவி செய்த காரியம்!

தப்பியோடிய கொரோனா தொற்றாளர் - மனைவி செய்த காரியம்!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 33 வயதுடைய கொரோனா தொற்றார் இன்று (11) மதியம் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வருகின்ற நிலையில் அவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக காணப்படுகின்றார். குறித்த நபர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கொரோனா தொற்றாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த கொரோனா தொற்றாளர் இன்று மதியம் அவரது வீட்டிற்கு தப்பியோடியுள்ளார். அதன் பின்னர் மனைவி அவரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து வந்து விட்டுள்ளார்.

மனைவியை விட்டு பிரிந்து வாழ முடியாத நிலையில் அவர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வருகின்றது.