18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த ஆலோசனை
18 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இதுதொடர்பான பரிந்துரைகள் எதுவும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சினோவெக் மற்றும் பைஸர் ஆகிய தடுப்பூசிகள் சில நாடுகளில் பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இதனை இலங்கையிலும் அமல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.