பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த விடயம்!
சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாடசாலைகளை திறக்க எதிர்ப்பார்த்திருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அங்கு வந்த கல்வி அமைச்சரிடம் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.