தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் ஆறு மாதக்கால சிறைத்தண்டனை!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 190 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49,449 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் சுமார் 41,000 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எஞ்சிய சுமார் 8,000 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் நபரொருவருக்கு , 10,000 அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் நீதிமன்றினால் விதிக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.