பயண கட்டுப்பாட்டை மீறி கொழும்புக்குள் நுழைய முற்பட்ட பேருந்தின் சாரதி கைது!
மாகாணங்களுக்கிடையிலான பயண கட்டுப்பாட்டை மீறி கொழும்புக்குள் நுழைய முற்பட்ட பயணிகள் பேருந்து ஒன்றின் சாரதி வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை - ஊருபொக்க பகுதியில் இருந்து பிரவேசித்த பேருந்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதி கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதான பேருந்தின் சாரதி காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.