பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகியுள்ள இந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமத்திப் பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.