கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,959 வாகன விபத்துக்கள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,959 வாகன விபத்துக்கள்

கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் 1,959 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் காரணமாக 205 பேர் மரணித்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்களில் 1,254 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த மாதம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில், அதிகமான விபத்துக்கள் மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன.

768 விபத்துக்கள் மேல் மாகாணத்தில் இடம்பெற்றதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.