ரக்வானை நகரில் இடம்பெற்ற தீப்பரவலில் 4 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

ரக்வானை நகரில் இடம்பெற்ற தீப்பரவலில் 4 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

ரக்வானை நகரில் சந்தை தொகுதியொன்றில் இடம்பெற்ற தீப்பரவலினால் 4 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன.

நேற்று (01) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த தீப்பரவல் ரக்வானை காவல்துறையினராலும் இரத்தினபுரி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினராலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மொரகாஹேன - கிரிவத்துடுவ பிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடமொன்றில் நேற்று (01) இடம்பெற்ற தீப்பரவலும் தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது