நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் மரணித்த அறுவரின் விபரங்கள்
நாட்டில் மேலும் 6 கொவிட்-19 மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தோரின் எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதான பெண் ஒருவர் கடந்த 25ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக வைத்தியசாலையில் மரணித்தார்.
கொவிட் நியூமோனியா நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியை சேர்ந்த 85 வயதான பெண் ஒருவர் கடந்த 27ஆம் திகதி மரணித்தார்.
கண்டி பொது வைத்தியசாலையில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் மரணித்தார்.
கொவிட் நியூமோனியா நிலை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 28ஆம் திகதி மரணித்தார்.
நாட்பட்ட சிறுநீரக நோயுடன் கூடிய கொவிட் நியூமோனியா நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெலிமட பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் கடந்த 28ஆம் திகதி மரணித்தார்.
வெலிமட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மரணித்தார்.
கொவிட் நியூமோனியா நிலை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
களுத்துறை பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர் கடந்த 27ஆம் திகதி களுத்துறை பொது வைத்தியசாலையில் வைத்து மரணித்தார்.
கொவிட் நியூமோனியா நிலை காரணமாக அவர் மரணித்தார்.
நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 61 வயதாக பெண் ஒருவர் கடந்த 28ஆம் திகதி மரணித்தார்.
நாவலபிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் மரணித்தார்.
கொவிட் நியூமோனியா நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது