நாட்டை முடக்குவதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை - இராணுவத் தளபதி

நாட்டை முடக்குவதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை - இராணுவத் தளபதி

எந்தவொரு சந்தர்ப்பத்திற்காகவும் நாட்டை முடக்குவதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 செயலணி உறுப்பினர்களுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் எமது செய்திச் சேவை வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஓரளவு அதிகமாக கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வைக்குமாறும் இராணுவத் தளபதி பொது மக்களிடம் கோரியுள்ளார்