படையெடுக்கும் சுற்றுலாவிகள் - நுவரெலியாவில் கொரோனா அச்சம்
ற்றுலாப் பயணிகள் நுவரெலியாவிற்கு வருவதை தவிர்க்குமாறு அரசாங்க அதிபர் அறிவித்தல் விடுத்தபோதும் நேற்றைய தினம் நுவரெலியா நகரில் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்திருந்தமையை அவதானிக்க முடிந்துள்ளது.
வருகை தந்தவர்கள் முககவசம் அணியாதும் கொரோனா தொற்று சுகாதார விதிமுறைய பேணாத வகையில் நடமாடியதையும் அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நுவரெலியா வாழ் மக்கள் கொரோனா தொற்று அச்சத்தினை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
