உடலில் விஷமேறியதால் தாய்- மகன் பலி!

உடலில் விஷமேறியதால் தாய்- மகன் பலி!

பொலன்னறுவை- பிஹிடிவெவ- நுவரகல பிரதேசத்தில் தாய் மற்றும் மகன் ஆகியோருக்கு உடலில் விஷமேறியமையினால் நேற்று (02) இரவு உயிரிழந்துள்ளனர்.

6 வயதுடைய மகனும் 28 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவருடைய மூன்று வயது மகனின் உடலிலும் விஷமேறியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்