திருகோணமலை உட்பட ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

திருகோணமலை உட்பட ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கையை தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (01) விடுத்துள்ளது.

இதன்படி பொலன்னறுவ , திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

இதேவேளை அடுத்த 36 மணி நேரத்தில் நாடு முழுவதும் மழை பெய்யக்கூடிய கால நிலை எதுவும் இல்லை என்று வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது