இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படும்! விடுக்கப்பட்டது எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படும்! விடுக்கப்பட்டது எச்சரிக்கை

தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது மக்கள் சுகாதார விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன கூறியுள்ளார்.

புத்தாண்டு பருவத்தில் மக்கள் 100 சதவீதம் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

புத்தாண்டு காலத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த தொடர் வழிகாட்டுதல்களை இவர் வெளியிட உள்ளார்.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை மிகச் சிறிய அளவில் ஏற்பாடு செய்ய அவர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

புத்தாண்டு விழாக்களில் குழு விளையாட்டு அனுமதிக்கப்படாது என்றும், சுகாதார விதிகளுக்கு இணங்க விளையாடக்கூடிய விளையாட்டு குறித்து சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் என்றும் குறிப்பிட்டார்.