வெளிநாடொன்றில் கொடுமைக்குள்ளான இலங்கை பெண்களின் துயரம்
தொழிலுக்காக லெபனானுக்கு சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்தநிலையில் 177 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இன்று(01) அதிகாலை 3.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்தனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்களுள் அதிகமானோர் வீட்டுப் பணிப்பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.