நேற்றைய தினம் கொவிட் தொற்றினால் உயிரிழந்த இருவரின் விபரங்கள்

நேற்றைய தினம் கொவிட் தொற்றினால் உயிரிழந்த இருவரின் விபரங்கள்

நாட்டில் மேலும் 2 கொவிட் 19 மரணங்கள் நேற்று பதிவாகின.

இதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவான கொவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 568 ஆக உயர்வடைந்துள்ளன.

வத்தளை பகுதியை சேர்ந்த 85 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

குருதி விஷமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை, உயர் குருதி அழுத்தம், நீரிழிவு, கொவிட் 19 நியுமோனியா நிலைமைகளே அவரது மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவருக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

குருதி விஷமானமை, மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை, மற்றும் கொவிட்-19 நியுமோனியா நிலைமையே அவரது மரணத்திற்கான காரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது