சட்டரீதியான முறைகளில் வட, கிழக்கு கடலில் மீன்பிடிக்க இந்திய மீனவர்கள் அனுமதிக்கப்படுவர்- அமைச்சர் டக்ளஸ்(காணொளி)
இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மாத்திரம் இந்திய மீனவர்கள் சட்டரீதியான அனுமதிக்கப்பட்ட முறைமைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படவுள்ளது.
இதற்கான ஆலோசனை தற்போது இடம்பெற்று வருகிறது என்று கடற்றொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை ராஜதந்திர ரீதியாக தீர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த ஆலோசனையை செயற்படுத்த முயற்சிப்பதாக அவர் எமது செய்தி சேவையுடன் இடம்பெற்ற தொலைபேசி சம்பாசனையின் போது குறிப்பிட்டார்.
இது தொடர்பான சம்பாசனை காணொளி வருமாறு..