உறுப்புரிமை தொடர்பான ரஞ்சனின் மனு விசாரணை ஒத்திவைப்பு

உறுப்புரிமை தொடர்பான ரஞ்சனின் மனு விசாரணை ஒத்திவைப்பு

தமது உறுப்புரிமை ரத்தாவதை தடுத்து நீதிபேராணையை பிறப்பிக்குமாறு சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அறிவித்தலை வெளியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பான அறிவிப்பு பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் ஐந்தாம் திகதி வெளியாகவுள்ளது.

இதன் தீர்ப்பு முன்னதாக இன்றைய தினம் வெளியாகவிருந்தது.

எனினும், இந்த வழக்கின் தீர்ப்பை இன்றைய தினம் வழங்க தயாராகவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ஜுன் ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகியோர் அறிவித்துள்ளனர்