கடந்த 24 மணித்தியாலங்களில் 1490 பேர் கைது....!

கடந்த 24 மணித்தியாலங்களில் 1490 பேர் கைது....!

இன்று காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய  1490 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 498  வாகனங்களும் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 70 ஆயிரத்து 42 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், இந்த காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 19 ஆயிரத்து 856 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.