யாழ் சென்ற டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு பிரிவு வாகனம் விபத்து

யாழ் சென்ற டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு பிரிவு வாகனம் விபத்து

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு பிரிவினரின் வாகனம் கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று அதிகாலை 6 மணியளவில் கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாக இவ் விபத்துச் சம்பவம் நடந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அலரிமாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டிருந்தார்.

அதனை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட அவரும், அவருடைய பாதுகாப்பு பிரிவினரும் நேற்று அதிகாலையளவில் யாழ்ப்பாணத்தை அடைந்துள்ளனர்.

அவர்கள் செல்லும் வழியில் அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் வந்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் வாகனம் பெரிய அளவில் சேதத்திற்கு உள்ளான போதும், அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினருக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.