பெரும்போகத்தின் போது 1.5 கோடி கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது
பெரும்போகத்தின் போது ஒரு கோடியே 50 லட்சம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அந்த சபையின் உப தலைவர் டப்ளிவ்.எச்.துமிந்த பிரியதர்ஷன இதனை தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படுமாயின் அந்த நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களை கைது செய்வதற்கான சுற்றி வளைப்புக்கள் தொடர்கின்றன.ஷ
நுகர்வோர் அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இதுவரை சுமார் 1500 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது