யாழில் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய தாயும் பிள்ளையும்!

யாழில் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய தாயும் பிள்ளையும்!

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியில் சற்று முன்னர் நடந்த விபத்து சம்பவத்தில் தாயும் பிள்ளையும் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கிட்டுப் பூங்கவில் இருந்து கச்சேரி நோக்கி வந்த வங்கி முகாமையாளர் ஒருவரின் கார், நாவலர் கச்சேரி நல்லூர் சந்தியினைக் கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இவ் அனர்த்ததின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் பிள்ளையும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய கார் வீதியோரமாக உள்ள தொலைத் தொடர்பு கம்பத்துடன் மோதுண்டுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கில் வந்த தாயும், பிள்ளையும் காயமடைந்த நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்