கைதிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சி தகவல்

கைதிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சி தகவல்

சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு இன்று (01) முதல் மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாரத்தில் ஒரு தடவை, ஒருவருக்கு மாத்திரம் இதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது.

அத்துடன், குறித்த நபர் சிறைக்கைதியின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட கைதிகள் 21 நாள்களுக்கு பார்வையிட அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இதேவேளை, வெளியில் இருந்து கொண்டுவரப்படும் உணவு பொருட்களை சிறைக்கைதிகளுக்கு வழங்குவதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது